tag:blogger.com,1999:blog-1987005091062049912.post1927097634350034612..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : 'சித்தக் கடல்'பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-9435284331863777432011-07-30T10:30:16.945-07:002011-07-30T10:30:16.945-07:00பராசக்தியிடம் தான் எத்தனை அன்யோன்யம்...
வணங்குகிறா...பராசக்தியிடம் தான் எத்தனை அன்யோன்யம்...<br />வணங்குகிறான், போற்றுகிறான், திட்டுகிறேன்.. கெஞ்சுகிறான், ஆணையிடுகிறான்.. உன் கடன் என்கிறான்... நீ இல்லைப் போ.. என்று விளையாட்டுக் காண்பித்து மீண்டும் கருணையைக் கேட்கிறான்... அப்பப்பா சக்தியோடு ஜீவித்திருக்கிறான்... பிரபஞ்சத்தின் ஆத்மா என்பது எவ்வளவு பெரிய உண்மை.. அந்த ஆத்மா இல்லாவற்றால் எல்லாம் ஜடம் தானே...<br /><br />"இவை அனைத்திற்கும் மூலப் பொருளாய், இவையனைத்தையும் தனது உறுப்புகளாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர்நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் தியானம் செய்வதால் உனது குறைகள் எல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவுதான் பெருமையடைகிறது."<br /><br />இதைதான் "பெரிதினும் பெரிதுகேள்" என்றான் போலும்... பெரிது சக்தி; அவளிடம் பரிந்து அவளினும் பெரிதுகேள் அதாவது அவளை அந்த சிவவெள்ளத்தில் கலக்க ஆற்றுப் படுத்த வேண்டுகிறான் / அழைத்துச்செல்ல வேண்டுகிறான்.<br /><br />"சலோ! தெய்வமுண்டு. அது அறிவு மயம். அந்த அறிவுக் கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும். "<br /><br />வேதாந்த முத்துக்லையே உதிர்கிறான்.... பேரறிவான அந்த சிவம் என்னும் பெருங்கடலில் இருந்தே வந்த இந்த ஆத்மா... இது அந்தக் கடலின் ஒரு சிறுத் திவலை என்பது எல்லாம் வேதாந்தத்தை அவன் சித்தமெல்லாம் நிரப்பியதையே தெரிவிக்கிறது....<br /><br />அவனதுப் படைப்புகள் எல்லாம், பாமருனுக்காக எழுதிய பாஷ்யம் என்றேக் கூறுவேன்...<br /><br />அற்புதம்... செயல் முறை வேதாந்தத்தின் முதல் படியில் நின்று எழுதியிருக்கிறான் மகாகவி...<br /><br />நன்றிகள் ஐயா!<br /><br />தமிழ் விரும்பி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com