tag:blogger.com,1999:blog-1987005091062049912.post2180298362699845772..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : இன்று தேவர்களை அழைக்கிறோம்.பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-27714899938831856802011-07-30T09:40:18.750-07:002011-07-30T09:40:18.750-07:00(ஐயா!..சென்ற பின்னூட்டத்தில் உள்ள எழுத்துக்களைத் த...(ஐயா!..சென்ற பின்னூட்டத்தில் உள்ள எழுத்துக்களைத் திருத்தி மீண்டும் இடுகிறேன்)<br /><br />கலைகள் அருமை...<br />இதிலே முதலில் ஒரு ரிஷி குமாரன் எழுதுகிறான் என்று எழுதியது தான் சிறப்பு. இவனின் நோக்கமே வேதகாலத்திற்கு செல்லவேண்டும் என்பதே... அதாவது தீமை அழிந்து நன்மை பெருகினால் கிருதயுகம் கிடைக்கப் பெறும். ரிஷிகள் அமரத்துவம் பெற்று வாழ்ந்தவர்கள். நான் ரிஷிகுமாரன். நானும் அப்படியே, அது தான் என் நோக்கம். அதை அடைந்தே தீருவேன். என்பதை ஒரே ஒரு சொல்லில் உணர்த்திவிட்டான். செஞ்சொற்வேந்தன். <br />இப்படி ஆரம்பித்தவன்... இந்த அமரத்துவம் <br />"மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.<br />அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக."<br />மனித சாதிக்கே வேண்டும் என்கிறான். அமரத்துவம் எப்படிக் கிட்டும், அதற்கான உபாயம் யாது.. அத்தனையும் உருட்டி திரட்டி மருந்தாக்கி அதை நமக்கு விருந்தாக்கி இருக்கிறான். இந்தக் கரும்பு சுவைக்க இனிமை... சுவைத்தால் சாகா வரம் தரும் என்பது திண்மை. உலகமே சக்திமயம் அவளிடம் காதல் கொள்வேன் அவள் மலர் நான் கருவண்டு. அவளிடம் காதல் கொள்.. புணர்சிக்கொள் அவள் மோகன மகா அனந்த வாழ்வை இந்த பூமியிலே உனக்கு அளித்து அமரத் தன்மை அடையச் செய்வாள் என்கிறான்.<br />சக்தியோடு இரண்டறக் கலப்பதே வீடுபேறு... அப்படி பேருற்றவனுக்கு மரணமில்லை... இந்த சக்தி யாரவள் அவளின் தன்மை என்ன அவள் எப்படிப்பட்டவள், அவளின் தோற்றம் மறைவு எப்படி இருக்கும் என்று பகுப்பவன்.... பரபிரமத்தின் உடலான இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களில் உண்டானது இவர்கள் தேவர்கள் இவர்கள் இயங்க சக்தியே காரணம்... ஆக, நாம் முதலில் தேவர்களைப் போற்றுவோம்... அது சக்தியைப் போற்றுவதாகும் என்றேத் துணிகிறான்.<br />மேலும் பாரதி... <br />"நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?"<br />என்கிறான்....<br />இந்த நான் யார்... அந்த சி.சுப்ரமணிய பாரதியா? இல்லை, இந்த நான் தான் "தான் என்ற அகந்தையை சின்ன நானை வென்ற பிறகு" அவனின் காதலி மகா சக்தி அழைத்துச் சென்று மூலத்தில் சேர்த்தாளே அந்த நான். ஆமாம் அந்தப் பெரிய "நான்" <br />"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்<br />மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் <br />கானில் வளரும் மரமெல்லாம் நான் <br />காற்றும் புனலும் கடலுமே நான்<br />...........................................................<br />நானென்னும் பொய்யை (சிறிய நான்) நடத்துவோன் நான்<br />ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான்<br />ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய் <br />அறிவாய் விளங்கும் முதற் சோதிநான்" (அந்த மிகப் பெரிய நான்)'<br />இந்த பித்தன், சித்தன், முக்தன், ஞானக் கிறுக்கன்... அநுபூதி நிலையிலே திரிந்தவன்..<br />அதற்கானப் பயிற்சி சூழல் அவன் பிறப்பிலிருந்து அவன் உடல் இறப்பின் வரை இருந்திருக்கிறது....<br />செயல்முறை வேதாந்தத்தின் தேவையை அதை நமது; வேதம் கொண்ட லோக குரு பாரத மாதா இந்த உலகிற்களிக்கும் என்பதே இந்த அனுபூதியின் தீர்க்கமான முடிவு... உலகம் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறது...<br />அருமை கெளடதரிடம் புறப் பட்டு.... பாரதியிடம் வியாபித்து லோக மனித சாதியிடம் நிறைத்து நிற்கிறது... முப்போதும் இருக்கும் அற்புதம்...<br />பதிவிற்கு நன்றிகள் ஐயா!<br />வணக்கம்,<br />தமிழ் விரும்பி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1987005091062049912.post-27514580219684652832011-07-30T09:31:41.763-07:002011-07-30T09:31:41.763-07:00கலைகள் அருமை...
இதிலே முதலில் ஒரு ரிஷி குமாரன் எழு...கலைகள் அருமை...<br />இதிலே முதலில் ஒரு ரிஷி குமாரன் எழுதுகிறான் என்று எழுதியது தான் சிறப்பு. இவனின் நோக்கமே வேதகாலத்திற்கு செல்லவேண்டும் என்பதே... அதாவது தீமை அழிந்து நன்மை பெருகினால் கிருதயுகம் கிடைக்கப் பெறும். ரிஷிகள் அமரத்துவம் பெற்று வாழ்ந்தவர்கள். நான் ரிஷிகுமாரன். நானும் அப்படியே, அது தான் என் நோக்கம். அதை அடைந்தே தீருவேன். என்பதை ஒரே ஒரு சொல்லில் உணர்த்திவிட்டான். செஞ்சொற்வேந்தன். <br />இப்படி ஆரம்பித்தவன்... இந்த அமரத்துவம் <br />"மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.<br />அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக."<br />மனித சாதிக்கே வேண்டும் என்கிறான். அமரத்துவம் எப்படிக் கிட்டும், அதற்கான உபாயம் யாது.. அத்தனையும் உருட்டி திரட்டி மருந்தாக்கி அதை நமக்கு விருந்தாக்கி இருக்கிறான். இந்தக் கரும்பு சுவைக்க இனிமை... சுவைத்தால் சாகா வரம் தரும் என்பது திண்மை. உலகமே சக்திமயம் அவளிடம் காதல் கொள்வேன் அவள் மலர் நான் கருவண்டு. அவளிடம் காதல் கொள்.. புணர்சிக்கொள் அவள் மோகன மகா அனந்த வாழ்வை இந்த பூமியிலே உனக்கு அளித்து அமரத் தன்மை அடையச் செய்வாள் என்கிறான்.<br />சக்தியோடு இரண்டறக் கலப்பதே வீடுபேறு... அப்படி பெறுற்றவன் மரணமில்லை... இந்த சக்தி யாரவள் அவளின் தன்மை என்ன அவள் எப்படிப்பட்டவள், அவளின் தோற்றம் மறைவு எப்படி இருக்கும் என்று பகுப்பவன்.... பரபிரமத்தின் உடலான இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களில் உண்டானது இவர்கள் தேவர்கள் இவர்கள் இயங்க சக்தியே காரணம்... ஆக, நாம் முதலில் தேவர்களைப் போற்றுவோம்... அது சக்தியைப் போற்றுவதாகும் என்றேத் துணிகிறான்.<br />மேலும் பாரதி... <br />"நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?"<br />என்கிறான்....<br />இந்த நான் யார்... அந்த சி.சுப்ரமனித பாரதியா? இல்லை, இந்த நான் தான் "தான் என்ற அகந்தையை சின்ன நானை வென்ற பிறகு" அவனின் காதலி மகா சக்தி அழித்துச் சென்று மூலத்தில் சேர்த்தாளே அந்த நான். ஆமாம் அந்தப் பெரிய "நான்" <br />"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்<br />மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான் <br />கானில் வளரும் மரமெல்லாம் நான் <br />காற்றும் புனலும் கடலுமே நான்<br />...........................................................<br />நானென்னும் பொய்யெய் (சிறிய நான்) நடத்துவோன் நான்<br />ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான்<br />ஆனா பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய் <br />அறிவாய் விளங்கும் முதற் சோதிநான்" (அந்த மிகப் பெரிய நான்)'<br />இந்த பித்தன், சித்தன், முக்தன், ஞானக் கிறுக்கன்... அநுபூதி நிலையிலே திரிந்தவன்..<br />அதற்கானப் பயிற்சி சூழல் அவன் பிறப்பிலிருந்து அவன் உடல் இறப்பின் வரை இருந்திருக்கிறது....<br />செயல்முறை வேதாந்தத்தின் தேவையை அதை நமது; வேதம் கொண்ட லோக குரு பாரத மாதா இந்த உலகிற்களிக்கும் என்பதே இந்த அனுபூதியின் தீர்க்கமான முடிவு... உலகம் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறது...<br />அருமை கெளடதரிடம் புறப் பட்டு.... பாரதியிடம் வியாபித்து லோக மனித சாதியிடம் நிறைத்து நிற்கிறது... முப்போதும் இருக்கும் அற்புதம்...<br />பதிவிற்கு நன்றிகள் ஐயா!<br />வணக்கம்,<br />தமிழ் விரும்பி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com