tag:blogger.com,1999:blog-1987005091062049912.post5582138330295314318..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : LOVE THINE ENEMY - பகைவனுக் கருள்வாய்பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-39636027277521024022011-08-31T01:41:12.916-07:002011-08-31T01:41:12.916-07:00பாரதி பன் மொழிப் புலவன் என்பதை அறிவேன் ஆனால் அவனின...பாரதி பன் மொழிப் புலவன் என்பதை அறிவேன் ஆனால் அவனின் ஆங்கில கவியின் திறத்தை இங்கே உணர்ந்து இன்புற்றேன்... தமிழ் புதுக் கவிதைகளின் கர்த்தா இவன் ஆங்கில கவிதையை அதன் லட்சணம் மாறாது "ரைம்ஸ்" என்று சொல்லக் கூடியவைத் தொட்டு (எதுகை மோனைகளை ஒப்பான..) அருமையாக கைகொண்டு அற்புதமான வார்த்தைகளைக் கொண்டு கவிதைப் புனைதுள்ளான்.... <br /><br />For an example; She is born of the inner Ocean of Milk;<br />She is sweet like the nectar of Heaven,<br /><br />Its extremely awesome...<br /><br />பெரும்பாலும் ஒவ்வொரு வரியுமே அது தாங்கிய சொற்களும் எதுகை மோனையோடு வருகிறது... அருமை..அருமை...<br /><br />"நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்<br />நேரு மாறெனை எந்தை பணித்தனன்;<br />புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்<br />போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம்<br />நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை<br />நாடு விப்பது போலவும்,எந்தைதான்<br />அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை<br />ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை,"....<br /><br />"அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்<br />தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;<br />முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்<br />மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்<br />பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்<br />பேடிக் கல்வி பயின்ருழல் பித்தர்கள்,"<br /><br />இப்படி விருப்பமில்லா எண்ணத்தோடு கற்ற இவன் எப்படியெல்லாம் வடித்திருக்கிறான்... நல்லவேளை இந்த ஆங்கிலத்தை உண்மையிலே காதல் கொண்டு கற்று இருந்தான் என்றால் அந்த ஆங்கிலக் கவிகள்... ஷெல்லியும், மில்டனும், என்? சேக்ஸ்பியரும் கூட இவனிடம் தோற்றே போயிருப்பார்கள் என்பது உறுதியே. <br /><br />பாரதி பல மொழி கற்றும் தமது தாய் மொழியின் மீது கொண்டிருந்த அன்பு தான் என்போன்றோர் அவனின் அமர கவிதைகளை படித்து உணர்ந்து அதிசயிக்க முடிகிறது.... அனுபவிக்க முடிகிறது... நன்றிகள் ஐயா!<br />வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com