tag:blogger.com,1999:blog-1987005091062049912.post6600941073010572479..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : பாரதியின் வேண்டுதல்.பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-35147171368651101102011-10-01T07:41:15.110-07:002011-10-01T07:41:15.110-07:00அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு ந...அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..<br />உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..<br />விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1987005091062049912.post-76014686929987733792011-10-01T07:40:39.825-07:002011-10-01T07:40:39.825-07:00அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு ந...அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..<br />உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..<br />விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1987005091062049912.post-13820049639995196242011-10-01T07:39:45.241-07:002011-10-01T07:39:45.241-07:00அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு ந...அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..<br />உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..<br />விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1987005091062049912.post-24504318333716166252011-09-15T00:37:25.723-07:002011-09-15T00:37:25.723-07:00ஆஹா! அருமை!! அற்புதம்!!!...
இந்த சொற்பொழிவை அச்சி...ஆஹா! அருமை!! அற்புதம்!!!...<br /><br />இந்த சொற்பொழிவை அச்சிட்டு எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் கிழக்குக் கடற்கரையில் நின்று கொண்டு மகாகவியை மனதில் நினைத்துக் கொண்டு அவன் எனதருகே, அருகிலே சிம்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு... அவன் முன்னே அவனைப் போல் பாடுவதாக கூறி ஏற்ற இரக்கத்தோடு உரக்கப் பாட வேண்டும்.. அப்போது கிடைக்கும் ஆனந்தம் தான் அந்த பேரானந்தம்....<br /><br />வழக்கமாக பாரதியின் பாடல்களை அவனின் பாணியிலே நெஞ்சை நிமிர்த்துக் கொண்டும், நேர்கொண்ட பார்வையில் முகத்தை சற்று உயர்த்திக் கொண்டும் விண்ணைப் பார்த்தவாறு பாடி பரவச மடைந்தால் தான் முழுவதுமாக அனுபவித்த திருப்தி கிடைக்கும். <br /><br />"வேதம் புதுமை செய்" என்றான் அவனே அதை செய்தான்... ஆக, அவன் படைத்த அந்த புதுமையான வேதத்தைப் புரிந்து கொள்ள பராசக்தியின் அருள் நிச்சயம் வேண்டும். பெரும்பாலும் அவன் யோக நிலையில் நின்றே அவனின் தொழில் செய்து இருக்கிறான்... அதைதானே அவனும் வலியுறுத்துகிறான்... அப்படி இருக்க அந்த தொழிலில் எத்தனை அற்புதம் புரிந்திருப்பான்... அதை எத்தனை காரண காரியங்களை புகுத்தி இருப்பான்... உண்மையில் சான்றோர்கள் கூறுவது போல்... தோண்ட தோண்ட புதிய பொருள் கிடைக்கும் அறிவுச் சுரங்கம் அவனது கவிகள். <br /><br />அவன் வேறு அவன் படைப்பு வேறு என்று இருந்ததே இல்லை... அவனின் ஆக்கம் தான் அவனின் சுய சரிதை. தோன்றினான், எண்ணி விரும்பினான், வேண்டினான், உழைத்தான், பெரிதிலும் பெரிதே வேண்டினான் அதன் படியே அவதார நோக்கத்தையும் கூறி பேரொளியில் கலந்திருக்கிறான்.<br /><br />இவனது ஆக்கங்கள், சிந்தனைகள், செயல் பாடுகள் இவைகள் யாவும் சத்தியமானவை... இவன் ஞானத்தை மட்டுமே போற்றி, உலகம் ஒரு மாயை என்று கூரித்திரிந்தவனே இல்லை.... இங்கே பாருங்கள்..<br /><br />"அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்<br />கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்<br />யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்<br />எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்<br />வானம் உண்டு; மாரி உண்டு<br />ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்<br />தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்<br />உடலும், அறிவும் உயிரும் உளவே;<br />தின்னப் பொருளும்; சேர்ந்திடப் பெண்டும்<br />கேட்கப் பாட்டும் காண நல் உலகும்<br />களித்து உரை செய்யக் கணபதி பெயரும்<br />என்றும் இங்கு உளவாம்; சலித்திடாய், ஏழை<br />நெஞ்சே, வாழி, நேர்மையுடன் வாழி!<br />....................................."<br /><br />அப்படி இருக்க இவனை எப்படி? வேதாந்தி என்னும் பெட்டிக்குள் பூட்டி வைக்க, நினைக்க துணிந்தார்கள் என்று எண்ணும் போது தான்.... வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்ற வருத்தம் பெருகுகிறது....<br /> <br />வேத உபநிடதங்களை எல்லாம் படித்து அதன் படி வாழ்ந்து மறைந்தவன்.<br /><br />"எவர்கள் அவித்யையை மட்டும் உபாஸிக் கிறார்களோ <br />அவர்கள் காரிருளில் புகுகின்றனர்.<br />எவர்கள் வித்யையில் மட்டும் ஆசை வைக்கிறார்களோ<br />அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றனர்.<br />அது அவித்யைக்கும் அப்பாற்பட்டது.<br />அது வித்யைக்கும் அப்பாற்பட்டது.<br />இது ஞாநிகளிடமிருந்து நாங்கள் கேட்டறிந்தது<br />வித்யை அவித்யை - இரண்டும் இணைத்த வழியை அறிந்தவன்<br />எவனோ, அவனே <br />அவித்யை மூலம் மரணத்தை வெல்கிறான்<br />வித்யை மூலம் அமரத்துவம் அடைகிறான்."<br /><br />இந்த ஈசா உபநிடதம் கூறும் இவைகளை தான் பாரதி தன் வாழ்நாளில் கொண்டு, மரணத்தை வென்று, அமரத்துவம் எய்தினான்.<br /><br />அருமையான சொற்பொழிவு (என்றே நினைக்கிறேன்)... அருமை. அருமை.<br />நன்றிகள் ஐயா!<br /><br />வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com