tag:blogger.com,1999:blog-1987005091062049912.post9177485521302388759..comments2024-03-03T21:50:28.172-08:00Comments on பாரதி இலக்கியப் பயிலகம் : இலக்கியச் சூரியன் "பாரதி"பாரதி இலக்கியப் பயிலகம்http://www.blogger.com/profile/06698630097406925658noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1987005091062049912.post-13962683853322509182011-08-28T21:25:00.859-07:002011-08-28T21:25:00.859-07:00இலக்கியச் சூரியன் பாரதி - ஆம்
இல(ங்)கு தமிழ் கவித...இலக்கியச் சூரியன் பாரதி - ஆம் <br />இல(ங்)கு தமிழ் கவிதைகளில் <br />இமயம் போல் உயர்ந்தவன்<br />உலகம் உய்ய உபாயம் உதிர்த்தவன்<br />ஊமை சனங்களை உரிமைகீதம் <br />பாடச் செய்தவன்.....<br /><br />கருணையின் ஊற்று -ஆம்<br />கவிகளின் அமூதூற்றவன் <br />'வேதம் புதுமை செய்'ய வேண்டியவன் - ஆம்<br />விடுதலை என்னும் வேள்விக்கு <br />வெந்தீயை மூட்டியவன்....<br /><br />சாதீயம் சாடியவன் சலித்துப் போன<br />சமயப் பொய்களை சவுக்கால் அடிக்க<br />சலிக்காமல் ஓடியவன்...<br /><br />உண்மையையே உயிராகக் கொண்டவன்<br />உண்மையல்லா அத்தனையும் <br />சுட்டெரித்த சூரியனவன்....<br /><br />பழைமைப் பொய்களைப் பழித்தவன்<br />பழைய மரப் பொந்துகளிலே <br />அக்னிக் குஞ்சுகளை வைத்தே <br />அவைகள் வெந்துதனியக் கண்டு <br />தனது சிந்தை யெல்லாம் <br />மகிழவே சிந்து பாடியவன்....<br /><br />இனத்தையும் மொழியையும் தான்<br />பிறந்த நாட்டையும் அல்லாது இந்த <br />உலகத்தையே உள்ளங்கையிலே <br />ஏந்தியவன் பாரதி....<br /><br />விடுதலை வேண்டியவன் -ஆம்<br />விடுதலை வேண்டியவன்... <br /><br />நாட்டிற்கு விடுதலை - நாயாய்<br />நடத்தப் படும் நங்கையருக்கும் விடுதலை <br />பாட்டுக்கு விடுதலை - மனப்<br />பேயென்னும் பயத்திற்கு விடுதலை <br />'சிட்டுக் குருவி போலவே <br />விட்டு விடுதலை யாகி நிற்பீர்' என்றே<br />சீர்மேவிய கவி பாடி விடு தளை என்றே<br />வேண்டியே நின்றும்.....<br /><br />இன்னும் சொல்வான் இவன், <br />இவையாவும் இப்போதே நடந்து <br />இந்தியர் யாவரும் பெறப்போகும்<br />அறிவென்னும் அமரத்துவேமே!...<br />உண்மையான தேவையான விடுதலை என்றே...<br /><br /> கலியை கொன்றே களியாட <br />அழிவில்லா பெருநிலை - அந்த<br />அற்புத பெருநிலையின் வழியை<br />இந்தியா உலகிற்கே தந்து<br />இந்த மண்ணிலே கிருத யுகம் <br />படைக்கும்... <br />ஆம்... ஆம், ஆம்... ஆம்,ஆம்,ஆம் <br />இந்த ஞானக் கிறுக்கன் - எப்போதும் <br />மோனத்திலே நின்ற முக்தி மூர்க்கன் <br />இவன் சக்தியின் காதலன் -ஆம்<br />அவளைக் காதலித்தே <br />அவளின் கரம்பிடித்தே பேரொளியில்<br />மூழ்கிய இவன் அமர கவி... <br /><br />பாரெல்லாம் நித்திய சுதந்திரம் பெற <br />தன் கவிதை என்னும் கழனியிலே <br />வேதமென்னு விதை தெளித்து <br />உபநிடத அறுவடை செய்தே <br /><br />பாமரனும் பரமனை சேர <br />பாங்குடனே வழிகூரிய <br />உலக மகாகவி இவன் - இந்த<br />மானிடம் உய்ய மருந்து தந்த<br />மகா புருஷன் எழுப்பிய சங்க நாதம்!<br />ஊழிவரை ஒலித்துக் கொண்டிருக்கும்...<br /><br />வேத நெறிகளை தன்னுள்ளே <br />வேள்வியாய் வளர்த்தவன்<br />சாதல் இல்லா பெரு வாழ்வை <br />சாமானியனும் அறியும் <br />வகை செய்தவன் - அதற்கு <br />இயற்கை என்னும் சக்தியை <br />காதல் கொள் என்றே வேண்டியவன்....<br /><br />இலக்கியச் சூரியன் மட்டும் அல்ல <br />இந்த பாரதி....<br /><br />கலியை சுட்டெரிக்க உதித்த <br />இன்னொருச் சூரியன் - ஆம் <br />அருவமாய் கவிதையின் உருவமாய் <br />அமரத்துவம் பெற்று பூமியை வலம் வரும் <br />ஈஸ்வரனே இந்த பாரதி.<br /><br />நன்றிகள் ஐயா... சிற்பியின் கவிதை வரிகள் என்னுள் ஒளிரும் பாரதி என்னும் விளக்கில், எண்ணெய் வார்த்து என்னையும் தூண்டியது....<br />வாழ்க வளர்க பாரதி பயிலகம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com