Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, September 10, 2011



பாரதி இலக்கியப் பயிலகம் - திருவையாறு பாரதி இயக்கம்
மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள் மற்றும்
பாரதி இலக்கியப் பயிலகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு 

கருத்தரங்கம்.

நிகழ்ச்சி நிரல்.

10-00 மணி. முதல் அமர்வு: தலைமை திரு அ.இராமகிருஷ்ணன்

1. செல்வி பு.ரம்யா, சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி, முன்னோடி 'திருவள்ளுவர்'
2. செல்வி செ.விஜயலட்சுமி, விண்ணமங்கலம், ஜி.சுப்பிரமணிய ஐயர்
3. திரு சா.சோமசுந்தரம், தஞ்சாவூர் 'குயில் பாட்டு'
4. திரு பா.குழந்தைவேலு, பாரத் கல்லூரி, தஞ்சாவூர் 'புதிய ஆத்திசூடி'
5. செல்வி மு. கிரிஜா, திருவையாறு 'பாரதி தாசன்'
6. திரு ஜி.ஜெயக்குமார், அரசர் கல்லூரி, திருவையாறு 'ஜீவா'
7. செல்வி எஸ்.கிரேசி ராணி, அரசர் கல்லூரி, 'பாரதி தாசன்'
8. செல்வி ஜோ.திவ்யா, பாரத் கல்லூரி, தஞ்சாவூர். 'காந்தி-பாரதி சந்திப்பு'

11-30 மணி இரண்டாம் அமர்வு: தலைமை திரு பி.இராஜராஜன்

1. திரு கே.சீனிவாசன், ஓய்வுபெற்ற ஆசிரியர், 'சேக்கிழாரடிப்பொடி TNR'
2. திருமதி ந.இராஜேஸ்வரி, ஓய்வுபெற்ற ஆசிரியர், பட்டீஸ்வரம் 'வ.ரா.'
3. திரு ஜி.ரவிக்குமார், வடக்கு வீதி, திருவையாறு 'ஜீவா'
4. திரு ரா.ராஜேஷ்குமார், பாரத் கல்லூரி, தஞ்சாவூர் 'வ.உ.சி.'
5. திரு எம்.சக்திவேல், ஆசிரியர், பெரம்பலூர். 'வாழ்க்கை சம்பவம்'
6. திரு டி.எம்.பத்மநாபன், பாரத் கல்லூரி, தஞ்சாவூர் 'திருவள்ளுவர்'
7. திருமதி மங்களம் பகவதி, ஓய்வு ஆசிரியை, திருவாரூர். 'சரத் சந்திரர்'
8. செல்வி பு. ரம்யா, புது அக்ரஹாரம், கல்யாணபுரம் வ.உ.சியும் பாரதியும்

பிற்பகல் 2-00 மணி மூன்றாம் அமர்வு. தலைமை இரா.மோகன்

1. திரு குப்பு வீரமணி, ரோட்டரி இயக்கம், 'ஜெயகாந்தனின் பாரதி பாடம்'
2. திரு நா.பிரேமசாயி, வழக்கறிஞர், திருவையாறு 'ஜி.சுப்பிரமணிய ஐயர்'
3. திரு ப.முத்துகுமரன், ஆசிரியர், மதுரை (பனையூர்) 'திருவையாறு பாரதி இயக்கம்'
4. திரு இளசை அருணா, ஆசிரியர் ஓய்வு, 'சித்ர பாரதி'
5. செல்வி சு.விஜயதீபா, அரசர் கல்லூரி, 'பாஞ்சாலி சபதம்'
6. திரு தி.பாரத், அரசர் கல்லூரி, திருவையாறு 'ம.பொ.சி.'
7. திருமதி வ.வஸ்திராபாய், ஆசிரியர் ஓய்வு, திருவாரூர் 'சகோதரி நிவேதிதா'
8. செல்வி ரா.காயத்ரி, அரசர் கல்லூரி, திருவையாறு 'ராஜாஜி'

9. சிங்கப்பூர் திருஆலாஸ்யம் (தமிழ்விரும்பி) எழுதிய 'பாரதியின் அவதாரமும் கிருத யுகமும்'
                                                                கருத்தரங்கில் படிக்கப்படும்
மாலை: 5-00 மணி.

நூல்கள் வெளியீடும் நிறைவு விழாவும்.
தலைமை: சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந. இராமச்சந்திரன் அவர்கள்

வரவேற்புரை: வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்
தலைமை உரை: சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்.

3 நூல்களைப் பதிப்பித்தவர்: திரு கி. முத்தையன், கோமுகி பதிப்பகம், சென்னை
விருந்தினர்களுக்கு அறிமுகம்.

திரு வெ.கோபாலன் எழுதிய "பாரதி போற்றிய பெரியோர்கள்" திரு பிரேமா அரவிந்தன் எழுதிய "விடுதலைக்கு வித்திட்ட வீரத் தலைவர்கள்" ஆகிய நூல்களை வெளியிட்டு
                                          சிறப்புரை

உயர்திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள்.

"பாரதி போற்றிய பெரியோர்கள்" முதல் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்கள்: 

முனைவர்
இராம கெளசல்யா
திரு G. ஸ்ரீநிவாசன், இந்து பத்திரிகை சிறப்பு நிருபர்.

"விடுதலைக்கு வித்திட்ட வீரத் தலைவர்கள்"                                                                                              முதல் நூலைப் பெற்றுக் கொண்டு
உரையாற்றுபவர்

 முனைவர் சாமி. செல்வ விநாயகம் அவர்கள்.

திரு பாக்கம்பாடி ஆ.அங்கமுத்து எழுதி "காகபுசுண்டர் ஞானம்"                                 நூலை வெளியிடுபவர்
திரு G. ஸ்ரீநிவாசன்

முதல் நூலைப் பெற்றுக் கொள்பவர்: திரு பழநியப்பன் அவர்கள், 
சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கல்

நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், தலைவர், பாரதி இயக்கம், திருவையாறு.

1 comment:

  1. மகாகவி பாரதிக்கு நினைவாஞ்சலி!

    சக்தியோடு கலந்த நித்திய பேரொளியே!
    சாகாவரம் பெற்ற சமத்துவக் கவியே!
    மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ
    மகத்துவ கவிபலத் தந்த மகாகவியே!
    ஞாலம் போற்றும் ஞானியர்தம் கருத்தை
    ஞாலம் உயரநாளும் உழைக்கும் - எளிய
    பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி
    பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர்
    பரமனின் மக்கள், மண்ணில் தெய்வம்
    உண்மை, உழைப்பு, ஒற்றுமையோடு - இங்கே
    ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி
    ஒருமையாய் உள்ள இயற்கையின் பன்மையை
    சக்தியின் தோற்றமதை நாளும் போற்றியே
    சத்திய ஜோதியில் கலந்துநற் கதிபெறுவீர்
    சாத்திரம் வேண்டாம்வேறு பலசடங்குகள் வேண்டாம்
    அன்பொன்றே போதும்ஆண்ட வனைச் சேர
    அன்பின் வடிவினன், அன்பில்வாழும் - அந்த
    அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே
    இன்பம் முருவீர் இன்னல் களைவீர் என்றே
    மானுடம் சிறக்க மாகவி பாடிய - உலக
    மகாகவி மறைந்து தொண்ணூறாண்டுகள் -ஆயினும்
    மனிதசாதிக்கு உழைத்து மங்காப்புகழ் கொண்ட
    மாணிக்கப் பேரொளியை மனதாரப் போற்றுவோம்
    வாழ்க வளர்க மகாகவியின் புகழ்!
    வாழிய! வாழிய!! வாழியவே!!!

    அன்புடன்,
    தமிழ் விரும்பி.

    பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தும், பாரதியின் தொண்ணூறாவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் சிறப்புற அன்னை சக்தி அவள் அருள வேண்டிக் கொள்கிறேன். நன்றிகள்.

    வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்

    ReplyDelete

You can send your comments